ADDED : மார் 17, 2025 04:20 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சேங்கல் சமுதாயக்கூட வளாகத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வன்னியரசு தலைமை வகித்தார்.கூட்டத்தில், வரும் ஏப்ரல், 14ல் புரட்சியாளர் அம்-பேத்கர் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது, சேங்கல் சமுதா-யக்கூட வளாகம் பராமரிப்பது குறித்து கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்குதல்; பஞ்சாயத்து தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகளவில் வேட்பாளர்களை நிறுத்துவது; திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் கபடி வீரர் தேவேந்திரராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை செய-லாளர் சேங்கல் பார்த்திபன், தொகுதி துணை செயலாளர் சர-வணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சரத்குமார், சூரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.