sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையோரம் கார்கள் நிறுத்தப்படுவதால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

/

சாலையோரம் கார்கள் நிறுத்தப்படுவதால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

சாலையோரம் கார்கள் நிறுத்தப்படுவதால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

சாலையோரம் கார்கள் நிறுத்தப்படுவதால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்


ADDED : செப் 20, 2024 01:39 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையோரம் கார்கள் நிறுத்தப்படுவதால்

நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

கரூர், செப். 20--

முக்கிய சாலைகளின் ஓரம், கார்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கரூர் மாநகராட்சியில், முக்கிய சாலைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் நிர்ணயித்துள்ள, 'பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கூட, 'பார்க்கிங்' வசதியே இல்லாமல் செயல்படுகின்றன. பெயரளவுக்கு வாகன நிறுத்தும் அளவுக்கு கீழ் தளத்தில் பார்க்கிங் வைத்துள்ளனர்.

கோவை, ஜவகர் பஜார் சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா ரவுண்டானா, தின்னப்பா கார்னர் ஒட்டியுள்ள பகுதியில், ஜவுளி, நகை, பேன்ஸி ஸ்டோர்கள், பேக்கரிகள் உள்ளன. இங்கு, எப்போதும் வாகன போக்கு

வரத்து அதிகமாக இருக்கும். அந்த கடைகளில் பார்க்கிங் வசதியில்லாததால் சாலையோரத்திலேயே கார் போன்ற வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, ஜவகர் பஜார் செல்லும் வலதுபுறம் சாலையில், ஒரு பக்கம் இருசக்கர வாகனங்களும், மறுபக்கம் கார்களும் வரிசையாக நிற்கின்றன. குறுகலான சாலை உள்ள தின்னப்பா கார்னர் சாலையோரம் கார்கள் நிறுத்தப்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us