sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெண்ணைமலை கோவில் பிரச்னை: 9 கடைகளுக்கு 'சீல்'

/

வெண்ணைமலை கோவில் பிரச்னை: 9 கடைகளுக்கு 'சீல்'

வெண்ணைமலை கோவில் பிரச்னை: 9 கடைகளுக்கு 'சீல்'

வெண்ணைமலை கோவில் பிரச்னை: 9 கடைகளுக்கு 'சீல்'


ADDED : நவ 28, 2025 02:19 AM

Google News

ADDED : நவ 28, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர், வெண்ணைமலை கோவில் இடம் பிரச்னை தொடர்பாக நடந்த, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், 9 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடங்களை மீட்க கோரி, உயர்நீதி-மன்றம் மதுரை கிளையில், திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதி-மன்றம்

டது. முறையாக நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், கோவில் நிலங்களை மீட்காவிட்டால், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது. அதன்படி மீட்பு நடவடிக்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் குடியிருப்பு பகுதிகளுக்கு 'சீல்' வைக்க வந்த போது, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால், அந்த பணியை ஹிந்து சமய அறநிலைத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு, 42 கடைகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரிகள் வந்தனர்.

அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் கணபதிமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, அ.திமு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

குடியிருப்புகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க வரவில்லை. கடைகளுக்கு தான் 'சீல்' வைக்க வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உரிய அவகாசம் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, நீதிமன்றம் உத்தரவு காரணமாக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால், 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. பின்னர் மதியம், 1:00 மணிக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 9 கடைகளுக்கு மட்டும் 'சீல்' வைத்தனர்.

கரூர் கூடுதல் எஸ்.பி., பிரேமானந்த் தலைமையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us