sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஊருக்குள் தேர் வந்து செல்ல நடவடிக்கை கரூர் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

/

ஊருக்குள் தேர் வந்து செல்ல நடவடிக்கை கரூர் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ஊருக்குள் தேர் வந்து செல்ல நடவடிக்கை கரூர் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ஊருக்குள் தேர் வந்து செல்ல நடவடிக்கை கரூர் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


ADDED : ஏப் 29, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:

சேனப்பாடி, அரவாயி அம்மன் கோவில் தேர், எங்கள் ஊருக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெரூர் கிராம மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கரூர் அருகில், நெரூர் வடபாகம் சேனப்பாடி அரவாயி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதியில், 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வைகாசி மாதத்தில் திருவிழா, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. இந்தாண்டு திருவிழா, மே 21 முதல், 23 வரை நடக்கிறது. வழக்கமாக தேர் திருவிழாவின்போது, நெரூர் மாரியம்மன் கோவில் அருகில் தேர் வந்து நிற்கும். அப்போது, பொதுமக்கள் வழிபாடு நடத்துவர். சில திருவிழாகளாக, எங்கள் ஊருக்கு தேர் வருவதில்லை. இதனை ஒரு பிரிவினர் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு தேர் வந்து செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us