sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரி பாசன வாய்க்காலில் நீர்வரத்து கோரை சாகுபடி பணி மும்முரம்

/

காவிரி பாசன வாய்க்காலில் நீர்வரத்து கோரை சாகுபடி பணி மும்முரம்

காவிரி பாசன வாய்க்காலில் நீர்வரத்து கோரை சாகுபடி பணி மும்முரம்

காவிரி பாசன வாய்க்காலில் நீர்வரத்து கோரை சாகுபடி பணி மும்முரம்


ADDED : ஜூலை 25, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், காவிரி பாசன வாய்க்காலில் நீர் வரத்து இருப்பதால், கோரை சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.கரூர் மாவட்டத்தில் வாங்கல், என்.புதுார், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாய்பாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர், மரவாப்பாளையம், புதுப்பாளையம், திருமாகூடலுார், அச்சமாபுரம், சோமூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 6 மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பராமரிப்பு செலவில்லாத கோரை புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோரை புல் மூலம், அதிகளவில் பாய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், கான்கிரீட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது. கோரை மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இது குறித்து, நெரூரை சேர்ந்த கோரை புல் விவசாயிகள் கூறியதாவது: தற்போது மேட்டூர் அணை தண்ணீர் வருவதால், காவிரி ஆறு பாசன வாய்க்காலில் நீர் வரத்து உள்ளது. கோரை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது அறுவடை தொடங்கி உள்ளது. 16 'இன்ச்' கொண்ட, 6 முடி கொண்ட கட்டு கோரைப்புல் கட்டு, 1,250 ரூபாய் வரை விலை போகிறது.

கடந்த ஏழு மாதங்களாக, விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் மூலம்தான், கோரை புல்லை விவசாயிகள் விற்க முடிகிறது. நேரடியாக விற்பனை செய்ய வழியில்லை. நெல்லுக்கு கொள்முதல் மையம் திறக்கப்படுவது போல, கோரைப்புல்லுக்கும் கொள்முதல் நிலையத்தை அரசே திறக்க வேண்டும். அப்போது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us