sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

/

மாயனுார் கதவணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 24, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று, 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக கடந்த, 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 12 ஆயிரத்து, 880 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 15,711 கன அடியாக அதிகரித்தது. அதில், காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்காக, 14 ஆயிரத்து, 891 கன அடியும், மூன்று பாசன வாய்க்கால்களில், 1,320 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 141 கன தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 22.83 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us