sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 15, 2024 01:42 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 15-

மழை காரணமாக, மாயனுார் கதவணைக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணை ஆறு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆறுகளில் மழை காரணமாக வரும், தண்ணீர் காவிரியாற்றில் கலக்கிறது.

இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 2,589 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 38 ஆயிரத்து, 706 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் சம்பா சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மழை காரணமாக, நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை

க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 57 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.32 அடியாக இருந்தது. மழை காரணமாக, நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகுதியில், 16 மி.மீ., மழை பெய்துள்ளது.






      Dinamalar
      Follow us