/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : நவ 01, 2025 01:22 AM
கரூர், மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,467 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 11 ஆயிரத்து, 828 கன அடியாக, தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 358 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.87 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை.

