/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
ADDED : செப் 14, 2025 04:54 AM
கரூர்: மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது.
கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் தண்ணீர் வரத்து வினாடிக்கு, 16 ஆயிரத்து, 518 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 15 ஆயிரத்து, 264 அடியாக குறைந்-தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 13 ஆயிரத்து, 794 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்-டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.50 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.