/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
ADDED : செப் 17, 2025 02:10 AM
கரூர் :மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் தண்ணீர் வரத்து, 19 ஆயிரத்து, 26 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 17 ஆயிரத்து, 145 கன அடியாக குறைந்தது, அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 15 ஆயிரத்து, 676 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.49 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.