sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெ.ஆ.கோவில் தடுப்பணைக்கு சரிந்த நீர்வரத்து

/

பெ.ஆ.கோவில் தடுப்பணைக்கு சரிந்த நீர்வரத்து

பெ.ஆ.கோவில் தடுப்பணைக்கு சரிந்த நீர்வரத்து

பெ.ஆ.கோவில் தடுப்பணைக்கு சரிந்த நீர்வரத்து


ADDED : டிச 16, 2024 03:59 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு வினாடிக்கு, 3,963 கன அடி தண்ணீர் வந்தது. அமரா-வதி ஆற்றில் வினாடிக்கு, 3,750 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.08 அடியாக இருந்தது.கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப் பகுதிகளான, அரவக்கு-றிச்சி, சின்னதாராபுரம், ராஜபுரம், க.பரமத்தி, செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் மழை இல்லை. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது. நேற்று முன்தினம் காலை தடுப்பணைக்கு வினாடிக்கு, 18,039 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 9,638 கன அடியாக குறைந்தது.

மாயனுார் கதவணை

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 13,520 கன அடியாக, தண்ணீர் வந்-தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிக்கு சாகு-படி பணிக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, 103 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 23.91 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்கா-லிமாக நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us