sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

/

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


ADDED : நவ 26, 2024 01:06 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி அணையில்

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கரூர், நவ. 26-

மழை காரணமாக அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 327 கன அடி தண்ணீர் வந்தது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து, 215 கன அடியாக குறைந்தது. மேலும், ஆற்றுப்பகுதிகளில் மழை காரணமாக, அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.67 அடியாக இருந்தது.

மாயனுார் கதவணை

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,659 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 639 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை

க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9 கனஅடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.89 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 75 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us