sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது


ADDED : டிச 07, 2024 06:43 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது.

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 7,779 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று

காலை, 8:00 நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,152 கன அடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும்

காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக, நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

நேற்று நிறுத்தப்பட்டது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 451

கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்-மட்டம், 88.49 அடியாக இருந்தது. அமராவதி அணையில்

இருந்து, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 313 கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றில், 125 கன அடி தண்ணீரும்

திறக்-கப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு நேற்று காலை, 602 கன அடி தண்ணீர் வந்தது.

ஆத்துப்பாளையம் அணை

க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 25 கன அடி

தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம், 23.61 அடியாக இருந்தது. நொய்யல் பாசன

வாய்க்காலில் வினாடிக்கு, 31 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மழை நிலவரம்

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர் நகரில், 2.40 மி.மீ., மழை,

மாயனுாரில், 4 மி.மீ., மழை பெய்தது.






      Dinamalar
      Follow us