sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு


ADDED : நவ 11, 2024 07:49 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு, 12,000 கன அடியில் இருந்து, 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே உள்ள, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 11,507 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 9,581 கன அடியாக குறைந்தது. அதில், 8,361 கன அடி தண்ணீர் டெல்டா பாசன பகுதிக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில், 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணைதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை அமராவதி அணைக்கு வினாடிக்கு, 370 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து, 261 கன அடியாக குறைந்தது. அமராவதி ஆற்றில், 350 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 269 கன அடியும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 85.80 அடியாக இருந்தது.

ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 29.44 அடி கொண்ட அணை நீர்மட்டம், 26.83 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us