/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தேங்கும் நீர்
/
லாலாப்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தேங்கும் நீர்
லாலாப்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தேங்கும் நீர்
லாலாப்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தேங்கும் நீர்
ADDED : ஜன 11, 2025 01:32 AM
கிருஷ்ணராயபுரம்,:லாலாப்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாதையில், ஊற்று நீர் அதிகமாக தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகில், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக வாகன ஓட்டிகள் எளிதாக லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் மற்றும் காவிரி ஆற்றுக்கு செல்கின்றனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் செல்வதால், ரயில்வே சுரங்கப்பாதையில் வாய்க்கால் நீர் ஊறி வருகிறது. இதனால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் செல்லும் போது சிரமப்படுகின்றனர். எனவே, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.