/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை
/
மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை
ADDED : டிச 09, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது.அதில், மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் ஆகிய வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடந்தது. பின், காலபைரவர் பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.