/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு வரவேற்பு
/
மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு வரவேற்பு
மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு வரவேற்பு
மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு வரவேற்பு
ADDED : மே 31, 2025 06:30 AM
கரூர்: இலங்கையில் நடந்த, மூத்தோர் தடகள போட்டியில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்று கரூர் திரும்பிய வீரருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரூரை சேர்ந்தவர் யோகா வையாபுரி, 75; முன்னாள் லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் தலைவர். இவர், சமீபத்தில் இலங்கையில் நடந்த மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்று குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றார். நேற்று காலை, சென்னையில் இருந்து ரயில் மூலம் கரூர் வந்த யோகா வையாபுரிக்கு, உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அதில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் வெங்கட்ரமணன், சிந்தன், சிவக்குமார், வைஷ்ணவி, திலகவதி உள்பட பலர் பங்கேற்றனர்.