sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.6.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

/

ரூ.6.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.6.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.6.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜூன் 17, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 5.10 கோடி மதிப்பில், 145 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஆடுகளை நாய்கள் கடித்து இறந்ததன் விளைவாக தமிழ்நாடு அரசின் சார்பில், 13 விவசாயிகளுக்கு, 3.12 லட்சம் ரூபாய் மதிப்பில் இழப்பீட்டு தொகை, மகளிர் திட்டம் சார்பாக வட்டார வணிக வள மையம் மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, 38 பயனாளிகளுக்கு 16.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி என மொத்தம், 296 பயனாளிகளுக்கு, 6.48 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us