sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது?

/

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது?

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது?

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது?


ADDED : அக் 21, 2024 07:35 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள கரூர் ஜவஹர் பஜாரில், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடப்பதை தடுக்க கூடுதல் போலீசாரை, பாதுகாப்புக்காக நியமனம் செய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும் வரும், 31ல் தீபாவளி பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புத்தாடைகள், தங்க நகைகள் வாங்க தொடங்கியுள்ளனர். கரூரை பொறுத்தவரை ஜவஹர் பஜார், கோவை சாலையில் அதிகளவில் ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது, கரூர் ஜவஹர் பஜாரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கரூர் ஜவஹர் பஜாரில் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆனால், கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசார் பெரும்பாலும் பணியில் இருப்பது இல்லை. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட், ஜவஹர் பஜார், கோவை சாலை பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை, திருடர்கள் பறித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கரூர் டவுன், வெங்கமேடு, தான்தோன்றிமலை மற்றும் பசுபதிபாளையம் போலீஸ் சரக பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், சேலம் பைபாஸ் சாலை, திருச்சி சாலை (காந்தி கிராமம்) பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, தீபாவளி பண்டிகை நேரத்தில், திருட்டு சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கரூர் ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில், கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us