/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிப்பிடம் திறப்பது எப்போது? எதிர்பார்ப்பில் பொது மக்கள்
/
கழிப்பிடம் திறப்பது எப்போது? எதிர்பார்ப்பில் பொது மக்கள்
கழிப்பிடம் திறப்பது எப்போது? எதிர்பார்ப்பில் பொது மக்கள்
கழிப்பிடம் திறப்பது எப்போது? எதிர்பார்ப்பில் பொது மக்கள்
ADDED : டிச 01, 2024 01:27 AM
கரூர், டிச. 1-
கரூர் அருகே, புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடம் எப்போது, பயன்பாட்டுக்கு வரும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் சாலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு, பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கழிப்பிடம் சேதம் அடைந்ததால் இடிக்கப்பட்டது. தற்போது, துாய்மை பாரத இயக்கம் சார்பில், ஏழு லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், பூட்டி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஆண்டாங்கோவில் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு விட, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.