ADDED : நவ 20, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவர் மாயம்
மனைவி புகார்
குளித்தலை, நவ. 20-
குளித்தலை அடுத்த, நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா, 38. இவரது கணவர் சங்கர், 37, சலுான் கடை வைத்துள்ளார். கடந்த, 7 காலை, 8:00 மணிக்கு வீட்டில் இருந்து, சலுான் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மொபைல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
தனது கணவரை காணவில்லை என, மனைவி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.