ADDED : நவ 10, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி மாயம்; கணவர் புகார்
கரூர், நவ. 10-
கரூரில், மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி புதுார் பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் ஹரிஹரன், 28; இவர், கடந்த ஓராண்டுக்கு முன் ஷாலினி, 23; என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம், வீட்டில் இருந்து கரூர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஷாலினி வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் ஹரிஹரன் போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.