ADDED : செப் 12, 2026 07:42 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கடவூர் வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஜான் ஜோசப், 28. இவர்
முனையனுார் பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி
அனுஷியாமேரி, 24. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த, 8ம் தேதி இரவு
சாப்பிட்டு விட்டு துாங்கினர்.மறுநாள் பார்த்தபோது அனுஷிசியாமேரியை
காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும்
கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின்படி,
தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
