UPDATED : டிச 02, 2024 01:20 PM
ADDED : நவ 30, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 42. இவரது மனைவி சாந்தி, 37. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி சாந்தி, திருச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
கடந்த, 22 காலை வேலைக்கு சென்றவர், இரவு வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, கணவர் சுரேஷ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.