sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா

/

மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா

மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா

மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா


ADDED : நவ 21, 2025 02:57 AM

Google News

ADDED : நவ 21, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன. பருவமழை துவங்கிய நிலையில், மின்வெட்டை தவிர்க்க, செடிகொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றி

மலை, வெண்ணைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பல இடங்களில் உள்ள மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் செடி,கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன.

இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.

இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், காற்றுடன் மழை பெய்கிறது. அப்போது, மின் கம்பங்களில் உள்ள செடி, கொடிகள் மூலம், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பருவ மழை தீவிரமடையும் முன், மின் கம்பங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us