sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் பாதையில் கூடுதல் தெரு விளக்கு அமைக்கப்படுமா?

/

விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் பாதையில் கூடுதல் தெரு விளக்கு அமைக்கப்படுமா?

விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் பாதையில் கூடுதல் தெரு விளக்கு அமைக்கப்படுமா?

விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் பாதையில் கூடுதல் தெரு விளக்கு அமைக்கப்படுமா?


ADDED : மே 28, 2024 07:03 AM

Google News

ADDED : மே 28, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூரில் மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்துக்கு செல்ல, அருகம்பாளையம் கிழக்கு பகுதி வழியாக செல்லும் சாலையில், கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறம், 15 ஏக்கரில், ஒரு கோடியே, 96 லட்ச ரூபாய் செலவில், மாவட்ட விளை யாட்டு அரங்கம் கட்டப்பட்டு கடந்த, 2013 ல் திறக்கப்பட்டது. அதில், கால்பந்து, கைப்பந்து, கபடி, கோ-கோ, தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு ஏற்ப விளையாட்டு மைதானம், மாவட்ட விளை யாட்டு அலுவலர் அலுவலகம், வீரர்கள் ஓய்வு அறை, கழிப்பிட வசதி, தங்கும் அறைகள் உள்ளன.

தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு செல்ல வெள்ளியணை சாலையில், இருந்து தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தான்தோன்றிமலை, ராயனூர், சுங்ககேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், அருகம்பாளையம் கிழக்கு பகுதி, தார் சாலை வழியாக சென்று வாக்கிங் செல்கின்றனர். ஆனால், மைதானத்துக்கு செல்லும் வழியில், ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை, போதிய தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது.இதனால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்துக்கு செல்ல, அருகம்பாளையம் கிழக்கு பகுதி வழியாக, கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us