ADDED : செப் 23, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர், டி.இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருணகிரி, 58; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாப்பம்மாள், 52. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிய-ளவில், வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்றார்.
அப்போது அங்-கிருந்த பாம்பு, பாப்பம்மாளை கடித்தது. உடனடியாக அவரை மீட்டு, கடவூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு பாப்பம்மாள் உயிரி-ழந்தார். இதுகுறித்து கருணகிரி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.