ADDED : நவ 19, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண் தொழிலாளி
மாயம்; தாய் புகார்
குளித்தலை, நவ. 19-
குளித்தலை அடுத்த, வயலுார் பஞ்., தேவசிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயா, 38, கூலித்தொழிலாளி, இவரது மகள் ஜஸ்மிதா, 22, கரூரில் டெக்ஸ் வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 16 இரவு வீட்டில் துாங்கியவர் மறுநாள் பார்த்தபோது காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகளை காணவில்லை என, தாய் விஜயா கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.