ADDED : அக் 05, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளிர் சுய உதவிக்குழு கூட்டம்
கரூர், அக். 5-
புகழூர் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவி குழு கூட்டம், செம்பாடம்பாளையத்தில் நடந்தது.
அதில், 138 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கூந்தல் தைலம், லட்டு, சப்பாத்தி, மசாலா பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பொருட்களை மண்டல அலுவலர் நித்தியானந்தம் பார்வையிட்டார். பிறகு, பொருட்களின் தரத்தை அதிகப்படுத்துவது, பொருட்களின் பேக்கிங்கில் தயாரிக்கப்படும் தேதி, முடிவடையும் தேதி, வங்கி கடனை மாதந்தோறும் செலுத்த வேண்டும் என, மகளிர் சுய உதவி குழுவினருக்கு மண்டல அலுவலர் நித்தியானந்தம் அறிவுரை வழங்கினார். அப்போது, மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிந்து, சமுதாய அமைப்பாளர் அமுதா உள்பட பலர் பங்கேற்றனர்.