ADDED : ஜன 30, 2026 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 57. கூலி தொழிலாளி. கடந்த, 27ல், அமரா-வதி ஆற்றோரம் நடத்து சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு தீண்டியுள்ளது.
வலியால் அலறி துடித்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையியல் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

