ADDED : ஆக 19, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, டூவீலரில் இருந்து கீழே விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
மேற்குவங்க மாநிலம், மாசிபாடி தெற்கு பகுதியை சேர்ந்தவர் துகைநாத், 24; இவர், கரூர் காந்தி கிராமம் பகுதியில் தங்கி, தொழிற்பேட்டையில் உள்ள கொசுவலை கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த, 16 இரவு துகைநாத், 'ஹோண்டா சைன்' டூவீலரில், சேலம் தேசிய நெடுஞ்சாலை, ராமேஸ்வரப்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தார். தலைக்கவசம் அணியவில்லை. அப்போது, திடீரென பைக் நிலை தடுமாறியதில், கீழே விழுந்த துகைநாத், தலையில் அடிபட்டு உயிரிழந்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
