sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாதுகாப்பு உபகரணம் இல்லாத பணியாளர்கள்; மாநகராட்சி நிர்வாகம் அலட்சியத்தால் பரிதவிப்பு

/

பாதுகாப்பு உபகரணம் இல்லாத பணியாளர்கள்; மாநகராட்சி நிர்வாகம் அலட்சியத்தால் பரிதவிப்பு

பாதுகாப்பு உபகரணம் இல்லாத பணியாளர்கள்; மாநகராட்சி நிர்வாகம் அலட்சியத்தால் பரிதவிப்பு

பாதுகாப்பு உபகரணம் இல்லாத பணியாளர்கள்; மாநகராட்சி நிர்வாகம் அலட்சியத்தால் பரிதவிப்பு


ADDED : ஆக 28, 2024 07:42 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றி வருவதால் நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், 80 ஆயிரம் குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, 48 வார்டுகள், ஒன்பது துப்புரவு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் துப்புரவு பணி செய்வதற்காக, 200 நிரந்தரம், 650 தனியார் ஒப்பந்த பணியாளர் என, மொத்தம், 850க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஹெல்மெட், கையுறை, காலணி, மழை கோட் என, எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவது கிடையாது. இதனால், துாய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் கூறியதாவது:மாநகராட்சி நிர்வாகம், நிரந்தர துாய்மை பணியாளர்களை நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம், பணி நியமனம் செய்து வருகிறது. இவர்களுக்கு தினமும், 400 ரூபாய் கூலியை தவிர எந்த சலுகையும் அளிப்பது கிடையாது. சில பாதுகாப்பு உபகரணங்கள் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் தரப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு கையுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இது கூட, கான்ட்ராக்ட் ஊழியர்களுக்கு கிடையாது. இவ்வாறு வேலை செய்வதால் நகம், தோல் வழியாக வைரஸ் கிருமிகள் பரவுகிறது. ரத்த சோகை, தோல் நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு சுகாதார பணியாளர்கள் ஆளாக நேரிடுகிறது. துாய்மை பணியாளர்கள் நோயாளிகளாக மாறுவதோடு, அவர்கள் மூலமாக பிறருக்கும் இது பரவும் ஆபத்து உள்ளது. இது பற்றி, மாநகராட்சி சுகாதார துறையிடம் துாய்மை பணியாளர்கள் பலமுறை வலியுறுத்தியும், எந்த பலனும் இல்லை. இவ்வாறு கூறினார்.

இது குறித்து, மாநகராட்சி நகர் நல அலுவலர் இலட்சியவர்ணன் கூறுகையில்,'' மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது, அணிந்து கொண்டு பணி செய்ய சிரமமாக இருப்பதால், அதனை பயன்படுத்துவது கிடையாது,'' என்றார்.






      Dinamalar
      Follow us