ADDED : ஏப் 28, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் கொங்கண சித்தர் குகை அமைந்துள்ளது. இங்கு, நேற்று, சித்திரை மாத அமாவாசையையொட்டி, மதியம், 12:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு உள்ளிட்ட மூலிகை திரவியங்களை கொண்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, மரப்பரை, செக்காரப்பட்டி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, பெரியமணலி, கருங்கல்பட்டி அக்ரஹாரம், பருத்திப்பள்ளி, மாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.