ADDED : ஜூலை 28, 2026 05:06 AM
கரூர்; காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்-காவை சேர்த்து வைக்கும்படி, கரூர் எஸ்.பி., அலுவலக வாசலில், நேற்று வாலிபர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்-தவர் ராகவேந்திரன், 40. இவர், நேற்று மதியம் கரூர் எஸ்.பி., அலுவலக வாசலில் அமர்ந்து கொண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்ட தனது அக்காவை, தன்னுடன் சேர்த்து வைக்கும் படியும், இல்லையென்றால் மாதம், 30 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் அனுப்ப வேண்டும் எனவும் கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ-சேர்வை, ராகவேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு, ராகவேந்திரனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஏ.டி.எஸ்.பி., பிரபா-கரனிடம் அழைத்து சென்றனர். இதனால் எஸ்.பி., அலுவலக வாசலில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்-பட்டது.
