/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் கட்டட பழுதை சரிபார்த்தவர் மீது தாக்குதல்
/
கோவில் கட்டட பழுதை சரிபார்த்தவர் மீது தாக்குதல்
ADDED : மார் 07, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் கட்டட பழுதை சரிபார்த்தவர் மீது தாக்குதல்
கிருஷ்ணகிரி,:ஓசூர், சானசந்திரம், வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 33, கட்டட பொறியாளர். இவர், நேற்று முன்தினம் அதே பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் கோவில் கட்டடத்தில், பழுதான பகுதிகளை ஆட்கள் வைத்து, சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர், சிவக்குமாரிடம், 'யாரை கேட்டு கோவில் வேலைகளை செய்கிறாய்' எனக்கூறி தாக்கினர். இது குறித்து அவர் அளித்த புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் சிவக்குமாரை தாக்கிய வி.ஓ.சி., நகரை சேர்ந்த ராஜசேகர், 31, நாகேஷ், 27, வஜ்ரமணி, 31, ஆகிய மூவரை கைது செய்தனர்.