ADDED : நவ 01, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த மனவாரணப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 65; கூலித்தொழிலாளி.
கடந்த, 22ல், டி.வி.எஸ்., மொபட்டில், கொல்லப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, மொபட் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த முத்தப்பாவை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

