sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

/

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


ADDED : ஜன 24, 2025 01:37 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குணவதி தலைமை வகித்தார்.

போராட்டத்தில், 3,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு துறையில் பணி நியமனம் செய்வதை தடை செய்து, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறை படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தில், 10 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தவர்களை பணி மூப்பு அடிப்படையில் அரசின் பிற துறைகளில் பணியமர்த்த வேண்டும். அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை, 60 லிருந்து, 62ஆக உயர்த்த வேண்டும். கருணை அடிப்படையில் ஆண் வாரிசுக்கும் பணி வழங்க வேண்டும்.

மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல், சத்துணவு ஊழியர்களுக்கும், 12 மாதங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட செயலாளர்கள் முருகம்மாள், வெண்ணிலா, முன்னாள் மாநில செயலாளர் ஜெயந்தி ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us