/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழுத்தை நெரித்து மகனை கொல்ல முயன்றவர் கைது
/
கழுத்தை நெரித்து மகனை கொல்ல முயன்றவர் கைது
ADDED : செப் 18, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கிலிகானப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஜினி. இவர் மனைவி சுவர்ணா, 40; கடந்த, 16ல், தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களது மகன் சூர்யா, 21 குறுக்கிட்டு, சண்டையை நிறுத்த முயன்றார். ஆத்திரமடைந்த ரஜினி, கழுத்தை பிடித்து நெறித்ததில், சூர்யாவின் தொண்டையில் காயம் ஏற்பட்டு, மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாய் சுவர்ணா புகார் படி, கே.ஆர்.பி. டேம் போலீசார் ரஜினியை கைது
செய்தனர்.