sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நகை கடைக்காரரைதாக்கிய 3 பேர் கைது

/

நகை கடைக்காரரைதாக்கிய 3 பேர் கைது

நகை கடைக்காரரைதாக்கிய 3 பேர் கைது

நகை கடைக்காரரைதாக்கிய 3 பேர் கைது


ADDED : ஜன 19, 2025 02:01 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் மோகன், 55, அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். தன் உறவினரான சவுந்திரராஜன் என்பவருக்கு பெண் பார்த்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தார். கருத்து வேறுபாடால் தம்பதி பிரிந்து விட்டனர். இந்நிலையில் சவுந்திரராஜன், 2வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அப்‍பெண்ணிடம் அவதுாறாக பேசுவதாக கூறி, மோகனிடம் சவுந்திரராஜன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த, 12 இரவு மோகனின் நகைக்கடைக்கு சென்ற சவுந்திரராஜன், 35, அவரது தம்பி ஜெகன், 32, தாய் சபிதா, 65 ஆகியோர் சேர்ந்து, மோகன் அவரது கார் டிரைவர் அஸ்லம் ஆகியோரை தாக்கியுள்ளனர். 'தன் முதல் மனைவியை பிரித்தது போதாதென்று, 2வது மனைவியையும் பிரிக்க பார்க்கிறாயா' எனக்கூறி மோகனை சவுந்திரராஜன் தாக்கியுள்ளார்.

இது குறித்து மோகன், 'சிசிடிவி' காட்சிகளுடன், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அளித்த புகார் படி, சவுந்திரராஜன், ஜெகன், சபிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us