sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிப்பான்கள்5 அடிக்கு மேல் அலகுகள் குத்த தடை

/

திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிப்பான்கள்5 அடிக்கு மேல் அலகுகள் குத்த தடை

திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிப்பான்கள்5 அடிக்கு மேல் அலகுகள் குத்த தடை

திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிப்பான்கள்5 அடிக்கு மேல் அலகுகள் குத்த தடை


ADDED : பிப் 26, 2025 01:21 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிப்பான்கள்5 அடிக்கு மேல் அலகுகள் குத்த தடை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சிவராத்திரி நாளில் அங்காளம்மன் மயான கொள்ளை திருவிழா நடக்கும். தற்போது, அங்காளம்மன் கோவில் கட்டப்பட்டு வருவதால், அங்காளம்மன் தேர் திருவிழா நடக்காது எனவும், பூங்காவனத்தம்மன் தேர் திருவிழா வழக்கம் போல் நடக்கும் எனவும், கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

அங்காளம்மன் திருவிழாவில், அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், காளி வேடமணிதல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி பேசுகையில், ''அங்காளம்மன் திருவிழாவில், பக்தர்கள் மிக நீண்ட அலகுகள் குத்தி வர தடை விதிக்கப்படுகிறது. 5 அடிக்கு மேல், அலகு குத்தி வரக்கூடாது. அதேபோல், கூம்பு வடிவ ஒலிப்பான்கள் பயன்

படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காளிவேடம் அணிந்து வருபவர்கள், கையில் கூர்மையான ஆயுதங்கள் இருக்கக்கூடாது. நகர் முழுவதும் 'சிசிடிவி' பொருத்தி போலீசார் கண்காணிப்பர். நகருக்குள் வரும், 27ல், வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., சிவசந்தர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us