/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகளிர் சுயஉதவி குழுவுக்குரூ.87.21 கோடி கடனுதவி
/
மகளிர் சுயஉதவி குழுவுக்குரூ.87.21 கோடி கடனுதவி
ADDED : மார் 09, 2025 01:38 AM
மகளிர் சுயஉதவி குழுவுக்குரூ.87.21 கோடி கடனுதவி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், மகளிர் தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த, 1,533 பேருக்கு, 87.21 கோடி ரூபாய் கடனுதவிகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கருணாகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள, மகளிர் சுய உதவிக்குழுனர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.