/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்
/
யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்
ADDED : செப் 11, 2024 06:11 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனச்சரகத்தில் ஏராள-மான யானைகள் முகாமிட்டுள்ளன. இரவில் அங்கிருந்து வெளி-யேறும் யானைகள் கூட்டம், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகள், சாவரபத்தா கிராமம் அருகே முகாமிட்டன.
அப்பகுதியில் விவசாயி பிரகாஷ் என்பவரது நிலத்திற்குள் புகுந்த யானைகள், 4 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சாமந்தி பூ தோட்-டத்தை நாசம் செய்தன. மேலும், நேற்று அதிகாலை வனப்பகுதி நோக்கி செல்லும் வழியில்,
விவசாய பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். வனத்துறையினர் சேதமான பயிர்களை பார்வையிட்டு, உடனடியாக இழப்பீடு வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.