/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
/
பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : செப் 12, 2024 07:11 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, லண்டன் பேட்டை சேர்ந்தவர் வெற்றிவேல், 23; இவர் தன் நண்பர்களுடன் கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அரு-கிலுள்ள காம்ப்ளக்ஸ் பகுதியில் மது அருந்தி உள்ளார். அவ்வழி-யாக பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த பிரசாந்த், 19, என்பவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இதை வெற்றிவேல் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், பிரசாந்த் சிலருக்கு போன் செய்து அழைத்துள்ளார்.
அப்போது வந்த மூவர், வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்-களை கடுமையாக தாக்கினர். வெற்றிவேல் புகார் படி, அவரை தாக்கிய பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ், 28, தங்கராஜ், 25, தேவேந்திரன், 19, ஆகிய மூவரை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர்.

