/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடியிருந்தவர் வீட்டிலேயே திருடிய பெண் சிக்கினார்
/
குடியிருந்தவர் வீட்டிலேயே திருடிய பெண் சிக்கினார்
ADDED : ஆக 08, 2024 05:45 AM
ஓசூர்: சூளகிரியிலுள்ள பேரிகை சாலை மஞ்சுநாத் லேஅவுட்டை சேர்ந்-தவர் பழனிசாமி, 52, விவசாயி; இவரது வீட்டின் முதல் மாடியில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகண்ணன் என்பவரது மனைவி சவுந்தர்யா, 26, தங்கியுள்ளார்.
வீட்டின் தரைதளத்திலுள்ள பழனிசாமி வீட்டில் அடிக்கடி திருட்டு சம்-பவம் நடந்ததால், வீட்டில் 'சிசிடிவி' கேமரா பொருத்தினார். அதன் மூலம் கடந்த, 5ல், பழனிசாமி வீட்டில் வாடகைக்கு குடி-யிருக்கும் சவுந்தர்யா, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பழனி-சாமி புகார் படி, சூளகிரி போலீசார், சவுந்தர்யாவை நேற்று முன்-தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.50 லட்சம் ரூபாய் பறி-முதல் செய்யப்பட்டது. பின்னர் சவுந்தர்யாவை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.