/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்
/
சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்
சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்
சீரமைத்த தற்காலிக மண் சாலை சகதியில் சிக்கிய வாகனங்கள்
ADDED : ஆக 19, 2024 12:30 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த தல்சூரில் இருந்து, குருபட்டி கிரா-மத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. இதில், புதிய தரைப்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு கடந்த இரு மாதங்க-ளுக்கு முன் பணி துவங்கப்பட்டது.
புதிய பாலம் கட்ட, சாலை குறுக்கே பள்ளம் தோண்டியுள்ளனர். அதனால், வாகன ஓட்டிகள் சென்று வர வசதியாக, அருகில் தற்காலிக மண் சாலை அமைத்-துள்ளனர். தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கடந்த, 12ல் தற்காலிக மண் சாலையில் அரிப்பு ஏற்பட்டு துண்டானது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவ-தியடைந்தனர்.
பாலம் கட்டும் பணி, மந்தகதியில் நடப்பதாக கூறி, குருபட்டி கிராம மக்கள் கடந்த, 12ல் மறி யல் போராட்டத்தில் ஈடுபட் டனர். கெலமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, துண்-டான தற்காலிக மண் சாலையை சீரமைத்தனர். இச்சாலை மிகவும் சேறும், சகதியுமாக காணப்பட்ட நிலையில், நேற்று அவ்-வழியாக சென்ற லாரி உட்பட பல வாகனங்கள் சகதியில் சிக்-கின. வாகனங்களை வெளியேற்ற டிரைவர்கள் கடும் சிரமப்பட்-டனர். அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்