/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி
/
தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி
ADDED : ஏப் 09, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று காலை வழக்கம் போல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ் பெற வந்திருந்தனர். அப்போது, தாசில்தார் அலுவலக பழைய பொருட்கள் வைப்பு அறை பகுதியில், 6 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள், அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பாம்பை லாவகமாக பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.