sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'உயர்வுக்கு படி' நிகழ்ச்சியால் மாணவியருக்கு சிறந்த எதிர்காலம்

/

'உயர்வுக்கு படி' நிகழ்ச்சியால் மாணவியருக்கு சிறந்த எதிர்காலம்

'உயர்வுக்கு படி' நிகழ்ச்சியால் மாணவியருக்கு சிறந்த எதிர்காலம்

'உயர்வுக்கு படி' நிகழ்ச்சியால் மாணவியருக்கு சிறந்த எதிர்காலம்


ADDED : செப் 11, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ''மாணவியருக்கு, 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி மூலம் மாணவிய-ருக்கு சிறந்த எதிர்காலம் அமையும்,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பேசினார்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 'நான் முதல்வன்' திட்டத்தில், பிளஸ் 2 முடித்து பட்டப்படிப்பு சேராத மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்வதற்கான, 'உயர்வுக்கு படி' விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து பேசியதாவது:

பிளஸ் 2 வகுப்பில், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுத தவறிய-வர்கள் அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்-காமல் இருக்கும் மாணவ, மாணவியரை ஊக்குவித்து உயர்கல்-வியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை

ஏற்படுத்த, உயர்வுக்கு படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முதல்கட்டமாக இன்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்-கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வரும், 13ல் ஓசூர் ஆர்.வி.அரசு

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2வகுப்பு முடித்த மாணவ, மாணவியரில் உயர்கல்வி பயில சேர்ந்துள்ள மாணவர்கள் குறை-வாக உள்ளனர். மீதமுள்ள மாணவர்களை உயர்கல்வி பயில ஏது-வாக உயர்வுக்கு படி நிகழ்ச்சிகள்

மூலம் அவர்களுக்கு விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு நிகராக மாணவி-யரும் இதில் கலந்து கொண்டு, பல்வேறு அறிவுரைகளை பெற்றால், அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமையும்.இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஆர்.டி.ஓ., பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us