/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இன்று கொடியேற்றத்துடன் மயான கொள்ளை திருவிழா
/
இன்று கொடியேற்றத்துடன் மயான கொள்ளை திருவிழா
ADDED : பிப் 25, 2025 06:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா இன்று (பிப்.25) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காலை, 10:30 மணிக்கு, ஹோமத்துடன் கொடி மரத்திற்கு பூஜை செய்து, காப்புக்கட்டுதலுடன் கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், அஷ்டதிக் பாலகர் பூஜை ஆகியவை நடத்தி, அம்ம-னுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.நாளை காலை, 8:00 மணிக்கு, மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சக்தி கரகம், பச்சை கரகம் எடுத்து கங்கையில் நீராடி விட்டு, சன்-னதி பிரவேசம் அடைகின்றனர். 27 அதிகாலை,
முகவெட்டு மயா-னத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும், 5:30 மணி முதல், பக்-தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றவும் உள்ளனர். மதியம், பூத வாகனத்தில் அம்மன் மயான கொள்ளைக்கு புறப்-படும் நிகழ்ச்சியும், இரவு, அம்மன் திருத்தேர் நகர்வலமும் நடக்-கிறது. வரும், 28ல், விடாய் உற்சவம், மார்ச், 1ல் மாலை, அக்னி குண்டம் தீமிதி விழா, 2ல் அம்மையப்பன் திருக்கல்யாணம், 3ல் கும்ப பூஜை, கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பருவதராஜகுல மீனவர் சமுதாயம் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.

