sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

/

2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி


ADDED : ஆக 13, 2024 08:03 AM

Google News

ADDED : ஆக 13, 2024 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் பெய்த கனமழையால், மழைநீர் வெளி-யேற வழியின்றி, வீடுகளில் புகுந்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை முதல் இரவு வரை கனமழையும் கொட்டி தீர்த்தது. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், 30,000க்கும் மேற்-பட்டோரும், அதையொட்டி மிட்டஹள்ளி பஞ்.,ல், 1,500க்கும் மேற்பட்டோரும் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் கடந்த, 2 நாட்-களாக பெய்த கனமழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்ல வழியின்றி, காவேரிப்பட்டணம், மிட்டஹள்ளி பஞ்.,க்கு உட்-பட்ட எம்.ஜி.ஆர்., நகர், ஜீவா நகரிலுள்ள வீடுகளுக்குள் புகுந்-தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதி கால்வாய் பகுதிகளில், 70- சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளன. மீத-முள்ள கால்வாய்களையும் துார்வாருவதில்லை. இது குறித்து மாவட்ட கலெக்டர் வரை பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இங்குள்ள வீடுகளுக்குள் மழை நீர், 3 அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. மலையாண்டஹள்ளி, தாளாமடுவு, சவுளூர், சுக்க-ராண்டஹள்ளி பகுதிகளில் மழை நீர் தேங்கியும், பயிர்கள் நீரில் மூழ்கியும் உள்ளன. ஓரிரு நாட்கள் பெய்த கனமழைக்கே இந்த நிலை என்றால், வடகிழக்கு பருவமழை காலத்தில், நாங்கள் இப்-பகுதியில் வாழமுடியாத சூழல் ஏற்படும்' என்றனர்.

அப்பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் சரயு கூறு-கையில், “சில இடங்களில் ஆக்கிரமிப்புகளும், நீர் வழிப்பா-தையை துார்வாராமல் விட்டதால், மழை நீர் சூழ்ந்துள்ளது. பொக்லைன் மூலம் மழைநீர் கால்வாய் துார்வார உத்தரவிட்-டுள்ளேன். இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.






      Dinamalar
      Follow us