sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையை கடந்த போது பைக் மோதி பா.ம.க., நிர்வாகி பலி

/

சாலையை கடந்த போது பைக் மோதி பா.ம.க., நிர்வாகி பலி

சாலையை கடந்த போது பைக் மோதி பா.ம.க., நிர்வாகி பலி

சாலையை கடந்த போது பைக் மோதி பா.ம.க., நிர்வாகி பலி


ADDED : செப் 07, 2024 07:36 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சாலையை கடந்த போது, பைக் மோதி பா.ம.க., நிர்வாகி பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பெரிய சப்படி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ், 38. பா.ம.க., இளைஞரணி மத்திய மாவட்ட துணை செயலாளர். இவர் தனியார் நிறுவனத்திற்கு, டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். குருபராத்தப்பள்ளி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் இரவு நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு வீட்டிற்கு பஜாஜ் பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார்.

திருமண மண்டபம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட, சுசூகி சூப்பர் ரேஸ் பைக், பல்சர் பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஹரிஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us